World

இந்தியாவை எச்சரித்தது பாகிஸ்தான்!

இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து இந்த அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இது போன்ற அலட்சியத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற மீறல்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே எல்லை பிரச்சினை தொடர்ந்து இருந்து வரும் நிலையில், ஹரியானாவின் சிர்சாவிலிருந்து வந்த ஏவுகணை பாகிஸ்தானின் மியான் சன்னு நகரின் அருகே விழுந்தது அந்நாட்டு ராணுவத்தால் கண்டறியப்பட்டது.

இது குறித்த விசாரணையில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச் பயணிகள் விமானங்கள் செல்லும் வழியாக இந்த ஏவுகணை சென்றுள்ளதால் உயிர்கள் மற்றும் பொருட்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இது இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading