நாளை நாடு பூராகவும் மின்வெட்டு!
நாட்டில் நாளை ( 21) மின்வெட்டுக்கு மேற்கொள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதுடன் தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.