Local

நகைக்காக 77 வயதுப் பெண்மணியை கொலை செய்த கொலைகாரன்!

சாய்ந்தமருது பிரதேசத்தில்  இடம்பெற்ற கொலைச்சம்பவமொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (27) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இலக்கம் 287, புதுப்பள்ளி வீதி, சாய்ந்தமருது-15 இல் தனியாக வசித்துவரும் 77 வயதான சுலைமான் செய்யது புஹாரி என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆறு ஆண் பிள்ளைகளின் தாயாரான இந்தப் பெண்மணி குறித்த வீட்டில் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டுக்குள் நுழைந்த கொலைகாரன் அந்த பெண்ணைத் தாக்கி கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த நகைகளை திருடிச்சென்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அவரது நான்காவது மகன் வழமைபோன்று காலை உணவை வழங்க, தாயாரின் வீட்டிற்கு வந்த போதே இந்த சம்பவத்தை அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading