இலங்கை வரலாற்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முதல் பெண் பிரதிப் பணிப்பாளர்!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/06/FB_IMG_1623413885920.jpg?resize=720%2C903&ssl=1)
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நியமனத்தின் மூலம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நிமிக்கப்பட்ட பெருமையை பெற்றுள்ளார்.
2007 ஆம் ஆண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர் ஆக காவல்துறையில் இணைந்து கொண்ட இவர் 14 வருட சேவை காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார்