இன்று முதல் பொலிஸார் சிவில் உடைகளில் கடமையில்!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2020/12/FB_IMG_1606626290138.jpg?resize=720%2C400&ssl=1)
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் இன்று முதல் பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை குறைக்கவும், கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொது மக்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறிவதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.