சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
இனிவரும் விடுமுறை தினங்களில் COVID-19 தொற்றுப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்பொருட்டு, கீழுள்ள விடயங்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- கிறிஸ்துமஸ்/விடுமுறை தினங்களில் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்வதை மட்டுப்படுத்தல்
- பொருட்கள் வாங்குவதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் சென்று வரல்
- வீடுகளுக்கு அருகில் உள்ள, மிகக் குறைவான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்தல்
- பெருமளவில் மக்கள் கூடும் வகையில், கேளிக்கை நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதைத் தவிர்த்தல்
- கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிக்கும் போது சமூக இடைவௌியைக் கடைப்பிடித்தல்
- வீட்டிலுள்ள வயோதிபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வீடுகளுக்கு உறவினர், நண்பர்களின் வருகையை மட்டுப்படுத்தல்
- பொருட்கொள்வனவின் போது வரிசையில் நிற்பவர்களுக்கு இடையில் இடைவௌி இருப்பதை உறுதிப்படுத்தல் (அவ்வாறு இடைவௌியைப் பேணாதவர்களிடம் அதனைச் செய்யுமாறு அறிவுறுத்துவது உங்கள் உரிமையும் கடமையுமாகும்)
- முடியுமானவரை ஒன்லைன் மூலமான கொள்வனவில் ஈடுபடல்
- வௌியிடங்களுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்த்தல்
- வீட்டிலிருந்து வௌியில் செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்வதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றல்.