ஐ.பி.எல்.அழைப்பை நிராகரித்தார் குமார் தர்மசேன!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடுவராக செயற்படுவதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை நடுவர் குமார் தர்மசேன நிராகரித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் நடுவராக பணியாற்றவுள்ளதாலேயே அவர் ஐ.பி.எல். அழைப்பை நிராகரித்துள்ளார் என கூறப்படுகின்றது.