தோல்வி அடைந்த வேட்பாளர்களுக்கு விருந்து கொடுத்தார் ரணில்!
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (15) நடைபெற்றது.
சிநேகப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு புரியாணியும் வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அத்துடன், கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், மாகாணசபைத் தேர்தல் முடிவடையும்வரை தானே தலைமைப்பதவியில் நீடிப்பார் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் எனவும் சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
” கட்சி தலைமைப்பதவியில் நீடிப்பதற்கே ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். எமக்கு பிரியாணியும் வழங்கினார். ஆனால், நான் வாங்கவில்லை. அவர் தலைமைப்பதவியில் இருந்தால் மாகாண தேர்தலில் நாம் போட்டியிடமாட்டோம்.” – என்று கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்