கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.52 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,52,039 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,64,12,794 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,00,42,362 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,245 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் தற்போதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,652,148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,36,019 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,812 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 918,735 பேர் குணமடைந்தனர்….