ஐரோப்பாவிருந்து அமெரிக்காவுக்கு வரத் தடை

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் பயணத் தடை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் அவா் குறி்பிட்டார்.

எனினும் இங்கிலாந்துக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும் அவா் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 38 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். 1,135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கான பயணங்களுக்கு தற்காலிக தடையை அமெரிக்க விதித்துள்ளது.

நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ட்ரம்ப், கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அதேபோன்று செய்ய ஐரோப்பிய நாடுகள் தவறியதால், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

சிறு வணிகங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர் கடன்களை வழங்குவதற்கான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் விளைவைத் தடுக்கும் முயற்சியில் முக்கிய வரி நிவாரண நடவடிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸை அவா் வலியுறுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *