LocalNorth

ஹெரோயினுடன் இருவர் வவுனியாவில் மாட்டினர்!

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நேற்றுப் பிற்பகல் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிலர் போதைப்பொருட்களுடன் நடமாடுகின்றனர் எனக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற போதை ஒழிப்புப் பிரிவினர் தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 10 மற்றும் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனப் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading