42 அடி உயரமான நத்தார் மரம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அன்னை ஆலயத்தின் பங்குமக்கள் மற்றும் இளைஞர்களின் முயற்சியினால் மின்குமிழ்களின் மூலம் குறித்த நத்தார் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளாரால் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *