Local

கோட்டாவுக்கான வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றினால் ஒரு மாதத்துக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.

வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைக்கப்பட்டதில், 49 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இதன்போதே, கோத்தாபய ராஜபக்சவின் கோரிக்கையை ஏற்று, டிசெம்பர் 14ஆம் நாள் தொடக்கம், ஒரு மாதகாலத்துக்கு, அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading