மாதாவின் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீர் சொரிவு! – யாழில் பரபரப்பு

யாழ். வேலணை – சாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயத் திருநாள் நாளை வியாழக்கிழமை ஆரம்பமகவுள்ள நிலையில் இந்தப் புதுமை நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தைப் பார்வையிடுவதற்காகப் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆலயத்துக்குப் படையெடுத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *