உயிரிழந்ததாக நம்பப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன்: அல் கொய்தாவுக்கு தலைமை ஏற்பு
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அல்-கொய்தா அமைப்புக்கு தலைமை ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒசாமா பின்லேடனின்(Osama bin Laden) மகன் ஹம்சா பின்லேடன்(Hamza bin Laden) அல்-கொய்தா (al-Qaida) தீவிரவாத அமைப்புக்கு தலைமையேற்றுள்ளதாக புதிய உளவுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் ஹம்சா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் புதிய பயிற்சி முகாம்களை நிறுவுவதில் கவனம் செலுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து அவர்களுடன் தொடர்புகளை அதிகரித்துள்ளது.
ஹம்சா பின்லேடன் மற்றும் அவரது நான்கு மனைவிகள், CIA-வின் கண்காணிப்பை தவிர்க்க பல ஆண்டுகளாக ஈரானில் தஞ்சம் புகுந்ததாக நம்பப்படுகிறது.
அவரது மரணம் குறித்த முந்தைய கூற்றுகளுக்கும், DNA உறுதிப்படுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை.
சமீபத்திய உளவுத்துறை தகவல்களின்படி, ஹம்சா தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பான வீடுகளைப் பயன்படுத்தி அல்-கொய்தாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக தெரியவந்துள்ளது.