World

மகளின் பாதுகாப்புக்காக தலையில் CCTV Cameraவை பொருத்திய தந்தை!

பாகிஸ்தானில் பாதுகாப்புக்காக மகளின் தலையில் CCTV கேமரா தந்தை ஒருவர் பொருத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் தலையில் CCTV கேமரா
சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வினோத சம்பவத்தில், பாகிஸ்தானில் மகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் CCTV கேமராவை பொருத்தியுள்ளார்.

இந்த அசாதாரண நடவடிக்கை, பரவலான விவாதத்தைத் தூண்டியதுடன், பெற்றோரின் அதீத பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தனியுரிமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

வீடியோவில், அந்த பெண் “தனது நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க தந்தை தலையில் கேமராவை பொருத்தியதாக தெரிவித்துள்ளார்”.

மேலும் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இது தனது பாதுகாப்புக்கு அவசியம் என்று நம்பியதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

தந்தையை தூண்டிய கொலை
சமீபத்தில் கராச்சியில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஊக்கமடைந்து இளம் பெண்ணின் தந்தை இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த CCTV கேமரா, தாக்குபவர்களை தடுத்து, தனது மகளின் இருப்பிடத்தை எப்போதும் கண்காணிக்க உதவும் என்று தந்தை நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த வீடியோவில், பல பயனாளர்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading