ஜே.வி.பி ஆட்சியை கைப்பற்றினால் இலங்கை ஆப்கானிஸ்தானாக மாறும்
கம்யூனிச சிந்தனைகளால் ஊட்டப்பட்ட ஜே.வி.பி இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையே மக்கள் அனுபவிக்க நேரிடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சமயப் பணிகள் குறித்து மல்வத்து மகா விகாரையில் கருத்து வெளியிட்ட அமில தேரர்,
கம்யூனிச அரசில் மதம் என்பது அபின் எனப்படும். அதன்படி ஜேவிபி ஆட்சியில் எந்த மதமும் இருக்க முடியாது.
இந்த நேரத்தில் நாட்டுக்கு சரியான ஆட்சியாளர் யார் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கும் கொள்கை அறிக்கைகள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள், தகவல் அறியும் சட்டம் போன்றவை உருவாக்கப்பட்டன. நல்லாட்சிக்கான செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் பௌத்த மதத்துக்கு பல பெறுமதியான சேவைகளை செய்துள்ளார். எதிர்காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
ஜே.வி.பி கம்யூனிச கருத்துகளைக் கொண்ட குழு. அவர்களுக்கு எந்த மதமும் இல்லை. இப்போது அதை திசைகாட்டி மூலம் மூடலாம். ஆனால், கம்யூனிஸ்ட் அரசில் மதம் இருக்க முடியாது.
ஜே.வி.பி இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தால் மதச்சார்பற்ற அரசு உருவாகும். அதுமட்டுமின்றி பேச்சு சுதந்திரமும் பறிக்கப்படும். சீனாவில் ஐந்து பேர் சேர்ந்து பேச முடியாது. வட கொரியாவில் பெண்களுக்கு சுமந்திரம் இல்லை. இவை கம்யூனிச அரசுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மதத்திற்கு மதிப்பில்லை என்று நீங்கள் கூறும்போது, எல்லா மதங்களும் கண்டிப்பாகப் பாதிக்கப்படும். தலதா பெரஹரா அரசின் ஆதரவுடன் நடைபெறுகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் அவை அனைத்தும் நிறுத்தப்படும்.” என்றார்.