Local

ரணிலுக்கு மேலும் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு?

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலுக்கு இலங்கை தயாராகிவிட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற உள்ளதுடன், நான்கு பிரதான வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

இதில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களனின் ஆதரவு பெருகிவருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட 14 பேர் இதுவரை ஜனாதிபதியை ஆதரித்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் 5 பேர் ஜனாதிபதியுடன் கைகோர்க்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading