மஹேல, சங்காவுக்கு சனத் ஜயசூரிய நன்றி தெரிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான வரலாற்று ஒருநாள் தொடர் வெற்றியை அடுத்து, இலங்கையின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யவுக்கு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிறப்பாக விளையாடிய அணியின் வீரர்களுக்கு முழுமையான அணிக்கும் வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தமது ‘X’ தளத்தில் இருவருக்கும் சனத் ஜெயசூர்ய நன்றி தெரிவித்துள்ளார்.
“சங்கா மற்றும் லசித் மலிங்க ஆகியோர் அளித்த ஆதரவுக்கு நன்றி கூறுகிறேன். அணிக்கான உங்கள் பங்களிப்பு எங்களுக்கு விலைமதிப்பற்றது.” எனவும் சனத் ஜெயசூர்ய கூறியுள்ளார்.