ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடமும் மத்தியக் குழுவும் இன்று (31) மாலை கூடியதுடன், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.