பொதுஜன பெரமுனவின் தீர்மானம் முக்கியத்துவமற்றது: பெரும்பாலானவர்கள் ரணிலையே ஆதரிப்பர்
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ள போதிலும் தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அரசியல் உயர்பீடம் எடுத்த தீர்மானம் முக்கியத்துவமற்றது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்ப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக நேற்று மாலை அறிவித்திருந்த பின்புலத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.