Local

இலங்கையில் கட்டாய தகனம் மன்னிப்பு கோர அமைச்சரவை அனுமதி!

கொவிட்- 19 தொற்றின்போது

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கொவிட் வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தி முறையாக தகனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இதனால் கொரோனாவினால் உயிரிழந்த 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன,
பின்னர் பெப்ரவரி 2021 இல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நபர்களுக்கு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கொவிட்-19 தொற்றின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கையால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினரிடம் மன்னிப்புக் கோருவதற்கு நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர். முன்மொழியப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading