Sports

இன்று LPL இறுதிப் போட்டி!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (21) நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி மர்வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கண்டி ஃபால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃபால்கன்ஸ், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading