Local

மின் கம்பி உராய்வால் ஏற்பட்ட விபரீதம்!

முந்தல், கொத்தான்தீவு வீதியில் நேற்று தும்புகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று திடீரென தீப் பற்றி எறிந்துள்ளது.

முந்தல் கொத்தான்தீவு சின்னப்பாடு வீதி ஊடாக தும்புகளை ஏற்றிய லொறி வீதியில் காணப்படும் பிரதான மின் கம்பியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பற்றியதுடன் லொறியில் காணப்பட்ட தும்புகள் முற்றாக தீக்கரையானது.

எனினும் கொத்தான்தீவு மக்களின்ஆ முயற்சியின் பலனாக லொறியில் தீப்பரவாமல் கட்டுப்பத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவித்த உடப்பு பொலிஸார் இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading