கோர விபத்து 15 பேர் படுகாயம்!
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தங்கொவிட்ட மற்றும் வெவெல்தெனிய பகுதிக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.