சிறுவர் தொழிலாளர் : நாளாந்தம் வந்து குவியும் முறைப்பாடுகள்
சிறுவர்களை தொழிலாளிகளாக பாவிப்பது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க (Udaya Kumara Amarasinghe) தெரிவித்துள்ளார்.
ஆனால் உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் (Sri Lanka) குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது மிகவும் குறைந்த அளவில் காணப்படுகிறது.
கடந்த வருடம் சிறுவர்களை தொழிலாளிகளாக வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக 186 முறைப்பாடுகளும், இவ்வருடத்தின் முதல் 5 மாதங்களில் 56 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த புகார்கள் அனைத்தும் தொழிலாளர் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 24 மணி நேரமும் செயல்படும் 1929 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.