World

போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதிலளிக்கவில்லை

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கிடையிலான போர் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போரில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவிட்டன. கூடுதலாக பலஸ்தீன மக்களே கொல்லப்பட்டிருக்கின்றனர். காசா பகுதியில் அதிகளவு குழந்தைகள், சிறுவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

ஹமாஸ் அமைப்பு கடந்த ஒக்ரோபரில் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 250 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் எனக்கூறி இஸ்ரேல் தொடர்ந்தும் தனது போர் நடவடிக்கைகளில் முன்னேறி வருகின்றது.

இவ்வாறிருக்க இந்தப் போரை நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேல் அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அதற்கு இணங்காத இஸ்ரேல் தொடர்ந்தும் ரஃபா நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனிடையே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கட்டாரில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

இதன்படி குறித்த போர் நிறுத்தம் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அவர்கள் மூன்று கட்ட வரைவு ஒன்றையும் முன் மொழிந்திருந்தார்.

ஆனால், இந்த போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் ஹமாஸ் அமைப்பு இதுவரையில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை என கட்டார் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading