இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இராஜினாமா!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்கும் வகையில் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் 294 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.