Local

சல்மான் கானை கொலை செய்து இலங்கைக்கு தப்பி ஓட திட்டம்?

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் பகுதியில் வைத்து நடிகர் சல்மான் கானை தாக்குவதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறார்களை பயன்படுத்தி, சல்மான் கானை தாக்கிவிட்டு, கன்னியாகுமரி வந்து அங்கிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல குற்றவாளிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading