T 20 உலக கிண்ண தொடருக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!
சர்வதேச T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தாக்குதல் நடத்தவுள்ளதாக ISIS ஆதரவு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ISIS ஆதரவு அமைப்பான கொராசான் என்ற தீவிரவாதக் குழு ‘Lone Wolf’ தாக்குதல் நடத்தவுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலையடுத்து, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என Nassau County பொலிஸ் கமிஷனர் பெட்ரிக் ரைடர் (Patrick Ryder) தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதை சர்வதேச செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.