Gossip

அனுமதி பெறாமல் தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு எதிராக மகள் வழக்கு!

தன் அனுமதியை பெறாமலும், தன்னை தொடர்பு கொள்ளாமலும் தன்னை பெற்றெடுத்துள்ளார்கள் என்று பெற்றோர் மீது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ் .இவர், தன்னுடைய அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தியாஸ் பேசிய வீடியோவில், “நான் இங்கு இருப்பதற்கு விரும்புகிறேனா, இல்லையா என்று நான் பிறப்பதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும்.ஆனால், என் பெற்றோர்கள் அவ்வாறு செய்யவில்லை, அதற்கு முயற்சிக்கவும் இல்லை. எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்றெடுத்ததற்கு பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்காமல், தத்தெடுத்துள்ளேன். அவர்கள் இங்கு இருப்பது என் தவறல்ல. அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற முயற்சி செய்வேன்.நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால் மனநல மருத்துவரை சந்தித்து, குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்டறிய வேண்டும்.என்னுடைய பெற்றோர்கள் அப்படி செய்யாததால் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன் பெற்றோருக்கு எதிராக குழந்தைகள் வழக்குத் தொடர கற்றுக்கொடுத்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading