Local

சஜித் , அநுர விவாத தினத்தன்று விடுமுறை?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினம் அரசாங்க விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன்று நான் மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். தயவு செய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். இந்த விவாதத்தில் இருவருமே மறைந்திருப்பது போல் தெரிகிறது. பொது விடுமுறையை பெயரிட்டு மக்களுக்கு தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

இலங்கையின் இந்த விவாதத்தைப் பார்ப்பதன் மூலம் எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப முடியும், ஏனெனில் சவாலை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருபுறமும் விவாதத்தில் இருந்து நழுவுகின்றனர். ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார்.

மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார். இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது. அவர்களால் முடியாது. தயவு செய்து நாங்கள் கோருகிறோம் வெட்டிப்பேச்சுக்களால் அல்ல செயலில் செயற்படுத்துங்கள்..”

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading