Sports

உயிரிழந்த தந்தை என்னுடைய திருமணத்திற்கு ஆவியாக வந்தார்! கிரிக்கெட் வீராங்கனை பேச்சு

 

உயிரிழந்த தந்தை தனது திருமணத்திற்கு ஆவியாக வந்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை தெரிவித்துள்ளார்.

தோழியுடன் திருமணம்
கடந்த ஏப்ரல் மாதம் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் அவரது நீண்ட நாள் தோழி சாரா வேரனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் 2020ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது, பின் 2021ம் ஆண்டு திருமணத்தை திட்டமிட்ட போது ஜெசிக்காவின் தந்தை உயிரிழந்ததால் மீண்டும் திருமணம் தடைபட்டது.

இறுதியில் ஜெசிக்கா ஜனாசன் சாரா வேரன் திருமணம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தந்தை திருமணத்தில் ஆவியாக வந்து கலந்து கொண்டாதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய போது, தன்னுடைய தந்தைக்கு வண்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும், அதனால் தான் அவர் நினைவாக வண்டை தன் உடம்பில் டாட்டூவாக குத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய திருமணத்தின் போது வண்டு ஒன்று தன் கையில் வந்து அமர்ந்ததாகவும், இறுதியில் நாங்கள் ஹோட்டல் அறைக்கு செல்லும் வரை வண்டு தன்னுடன் இருந்ததாகவும் குறிப்பிட்ட ஜெசிக்கா, தனது தந்தை தான் ஆவியாக வண்டு உருவத்தில் என்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதலில் இதனை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன், அப்போது நமது திருமணத்தை மிஸ் செய்யாமல் தந்தை வந்துவிட்டார் என மனைவி சாரா கிண்டல் கூட செய்தார் என ஜெசிக்கா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading