Local

கச்சா எண்ணெய் விலை 75 வீதம் உயர்வடையும் ; உலக வங்கி எச்சரிக்கை

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மூண்டுள்ள போர் மத்திய கிழக்கில் பரவும் அபாயம் உள்ளதால் கச்சா எண்ணெய் விலை 75 வீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட எதிர்பாராத தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

போர் தொடர்ந்தால் உலக பொருளாதார மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என பொருளியல் நிபுணர்கள், தெரிவிக்கின்றனர்.

கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கடும் போர் வெடித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

“போர் மோசமடைந்ததால் பத்து ஆண்டுகளில் முதல் முறையாக உலகப் பொருளியலுக்கு இரட்டை எரிபொருள் பாதிப்பு ஏற்படும்,” என்று உலக வங்கியின் தலைமை பொருளியல் மற்றும் பொருளியல் மேம்பாட்டுக்கான மூத்த உதவி தலைவர் டாக்டர் இன்டெர்மிட் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 முதல் 90 டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading