World

பல முனைகளில் போரால் சூழப்பட்டுள்ள இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போர் நடந்து 15 நாட்களை கடந்துவிட்டன. இந்தப் போரின் கோரத் தாண்டவத்தால் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஒட்டுமொத்த உலகமே அதிர்ந்துள்ளது.

கடந்த ஏழாம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகளின் இரத்தக்களரி தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் காசா பகுதியில் வான்வழி தாக்குதலை நடத்தியது, இதில் பலர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் ஆயத்தங்களையும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் திட்டங்களையும் பார்க்கும் போது, ​​போர் நீண்டதாக இருக்கும் என்றே கூறலாம்.

ஏனெனில் தோல்வியை ஏற்க ஹமாஸ் தயாராக இல்லை. அவர்கள் இன்னும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தனது சிறைப்பிடிப்பில் வைத்திருக்கிறார்.

இஸ்ரேல் ஒருபுறம் காசாவில் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில் மறுபுறம் லெபனானை முழு பலத்துடன் கைப்பற்றி வருகிறது.

ஆனால், அவர்களால் காசாவில் தரைவழிப் போரை வெளிப்படையாக நடத்த முடியவில்லை.

ஏனெனில், அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்பதால், உலக நாடுகள் இஸரேலை தரைவழி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் இஸ்ரேலுக்கு கடினமாகி வருகிறது. இஸ்ரேல் விரும்பினாலும், காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்த முடியாது.

காசாவிற்குள் நுழைந்து ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கொல்ல வேண்டும் என்பது இஸ்ரேலின் ஆசை. ஆனால், அமெரிக்கா அவ்வாறு செய்வதை தடுக்கின்றது.

பணயக்கைதிகள் நெருக்கடி முற்றிலும் முடியும் வரை தரைவழி தாக்குதல்களை நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக நாடுகள் அக்கறை கொண்டுள்ளன.

ஹமாஸ் தளங்களை இஸ்ரேல் அழித்து வருகின்றது. காசா பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சியளிக்கின்றது. பலரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் பொது மக்களை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளது. பணயக்கைதிகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி இந்தப் போரில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரேல் ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் போரைத் தொடங்கியது. ஒருபுறம், காசாவின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு காசாவுடன் தெற்கு காசா நகரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

மறுபுறம், லெபனானின் தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. லெபனான் எல்லையில் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

ஆனால் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு வானிலேயே அவற்றை அழித்து வருகிறது. இஸ்ரேலிய போர் விமானங்களும் லெபனான் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹட்செட் கூறுகையில், “நேற்று இரவு லெபனானுக்குள் தாக்குதல் நடத்தி சில இலக்குகளை அழித்தோம்” என்றார்.

லெபனானில் இருந்து எப்போது தாக்குதல் நடந்தாலும் பதிலடி கொடுப்போம் என்பதே எங்கள் கொள்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பணயக்கைதிகள் நெருக்கடி நீடிக்கிறது. ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் உறவினர்கள் வீடு திரும்புவதற்காக குடும்பங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

ஹமாஸை ஒழிப்பதாக சபதம் எடுத்து போர் முனைக்கு வந்த இஸ்ரேல் தற்போது இறுதித் தாக்குதலுக்கான முழுத் தயாரிப்புகளையும் செய்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள், ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் மிகவும் ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது.

ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது. முதலில் காசாவில் உள்ள ஹமாஸ் தளங்களை அழிக்க இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

பின்னர் நவீன துப்பாக்கிகள் காசாவை நோக்கி திரும்பியது. இப்போது இஸ்ரேலிய இராணுவம் F-16 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்றிரவு ஹமாஸின் பல பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் கட்டளை மையங்கள் இடிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காசா மீதான தரைவழி நடவடிக்கைக்கு இஸ்ரேல் முழு ஆயத்தங்களையும் செய்துள்ளது. இஸ்ரேல் சரியான நேரத்திற்காக காத்திருக்கின்றது.

எவ்வாறாயினும், தரைப் போர் தொடர்பாக இஸ்ரேல் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. காசாவில் இருந்து மட்டுமல்ல, மேற்குக் கரையில் இருந்தும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் மேற்குக் கரையில் அமைந்துள்ள அல் அன்சார் மசூதி மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

மசூதியின் முன் சுவர் உடைக்கப்பட்ட விதம், தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை காட்டுகின்றது. அல் அன்சார் மசூதியில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

இங்கிருந்து தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாகவும், துல்லியமான இலக்கை கணித்து மசூதியின் மீது போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன.

மசூதி மீதான தாக்குதலில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த போரில் இரு தரப்பு மக்களும் காயமடைந்துள்ளனர். மக்கள் இருதரப்பிலும் குடும்பங்களை இழந்துள்ளனர். வீடற்றவர்களாகவும் இரத்தம் சிந்துவதையும் பார்த்திருக்கிறார்கள்.

வீடு மற்றும் குடும்பம் முழு உலகமாக இருந்தவர்களுக்கு, குண்டுவெடிப்பு அவர்களின் முழு உலகத்தையும் அழித்தது. அவர்கள் போர் நிறுததத்தை விரும்புகிறார்கள்.

சாமானிய மக்களுக்கு அவர்களின் உரிமைகளும் நீதியும் கிடைக்க வேண்டும். யுனிசெஃப் கருத்துப்படி, காசாவில் உள்ள ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.

காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் சுமார் 35,000 பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர்.

மறுபுறம், ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் போராட்டங்கள் தொடர்கின்றன.

பணயக்கைதிகள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

தங்களின் அன்புக்குரியவர்களை விரைவில் மீட்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனிதாபிமானம் இல்லாத இந்தப் போரில் நல்லிணக்கத்திற்கு ஏதாவது வழி கிடைக்கும் என்பது இரு தரப்பிலும் உள்ள நம்பிக்கை ஆகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading