இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700 – 800 பெண்கள் உயிரிழப்பு
இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700 – 800 பேர் உயிரிழப்பதாக வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் சுராஜ் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஒரு நாளைக்கு 14 நோயாளர்கள் பதிவாவதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பகால நோயறிதல் நிலையானது நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார்,
மேலும், நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்த மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்