Local

அஞ்சியோகிராம் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

 

கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகளில் அஞ்சியோகிராம் (Angiogram) பரிசோதனை இயந்திரங்கள் செயலிழந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சீர் செய்யாமை காரணமாக குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இருதய நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் குறித்த பரிசோதனை, சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அஞ்சியோகிராம் பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவாகும் என அரச கதிரியக்க தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading