Local

கோட்டாவின் தீர்மானத்துக்கு ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம்!

 

போராட்டத்தின் போது நாடளாவிய ரீதியில் அவசர சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) காலஅவகாசம் வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் எட்டு வாரங்களுக்குள் உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading