Local

ரணில் பதிலா?கேள்வியா? விமல் நடத்தவுள்ள தொடர் மாநாடு!

ரணில் என்பது பதிலா? கேள்வியா?”என்ற தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் தொடர் மாநாடுகளை நடாத்துவதற்கு உத்தர லங்கா கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதல் கட்டமாக இன்று (11) மாலை 5 மணிக்கு பாணந்துறை தல்பிட்டிய “வைட் ஹெவன்” ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுத் தொடரின் பேச்சாளர்களாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவங்ச, தேசிய அமைப்பாளர் வாசுதேவ நாணயக்கார, பிரதித் தலைவர் உதய கம்மன்பில, அத்துரலியே ரத்தன தேரர், பிரதிச் செயலாளர் கெவிந்து குமாரதுங்க, செயலாளர் கலாநிதி ஜி. வீரசிங்க அவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading