இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறைகிறது!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகளை சுமார் 20 வீதம் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போதுள்ள கையிருப்புக்கள் தீர்ந்தவுடன் இந்த நிவாரணத்தை நுகர்வோருக்கும் வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் டொலருக்கு எதிரான பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் உயர் மதிப்பு கையடக்கத் தொலைபேசிகளின் விலை சுமார் 30 வீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.