Cinema

நடிகர் அர்ஜுனின் தொல்லையால் சினிமாவை விட்டு விலகிய ரஞ்சிதா?

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் 1984 -ம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் பல வித்தியமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

திரைத்துறையில் பல நடிகர்கள் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். ஆனால் நடிகர் அர்ஜுன் இது போன்ற விஷயத்தில் சிக்கியதில்லை. இவர் சினிமாவை தாண்டி தன்னுடைய நேரத்தை உடற்பயிற்சி செய்வதில் செலவிடுவார்.

இந்நிலையில் ஜெய்ஹிந்த், கர்ணா, பொம்மலாட்டம் படத்தில் அர்ஜுன் நடிகை ரஞ்சிதாவுடன் சேர்ந்து நடித்திருப்பார். அர்ஜுன் படப்பிடிப்பில் ரஞ்சிதாவிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சில வதந்திகள் வெளிவந்தது.

ஆனால் இந்த விஷயங்கள் முற்றிலும் பொய் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.தேவையில்லாத நபர்கள் இதுபோன்ற வதந்திகளை கிளம்புவதாக தெரிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading