Cinema

பிரபல நடிகையை தனியாக அறைக்கு அழைத்த தயாரிப்பாளர்!

நடிகை சொல்வது அனைத்துமே பொய் என்று தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தரப்பில் இருந்து ஒரு புகாரும் மும்பை போலீசாருக்கு சென்றுள்ளது. புதுடெல்லி சாப் டிவியில் 2008ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் டிவி தொடரில் நடித்து வந்த பிரபல நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால் அந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி மீது பாலியல் தொல்லை புகார் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தன்னை தனியாக ரூமுக்கு வா சரக்கடிக்கலாம் என அழைத்தார் என்றும் அடிக்கடி ஆபாசமாக பேசுவது, தவறாக தொடுவது என எல்லை மீறினார் என தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 4 மாதத்துக்கு முன்னதாகவே அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் தொடரில் இருந்து வெளியேற போகிறேன் என சொன்ன நிலையில், தனக்கு வர வேண்டிய 4 மாத சம்பளத்தை பிடித்து விடுவோம் என இணைத் தயாரிப்பாளர்கள் இருவர் மிரட்டியதாகவும் மேலும், அவர்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் நடிகை ஜெனிபர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சொல்வது அனைத்துமே பொய் என்று தயாரிப்பாளர் அசித் குமார் மோடி தரப்பில் இருந்து ஒரு புகாரும் மும்பை போலீசாருக்கு சென்றுள்ளது. அதில், நடிகை சரியாக ஷூட்டிங் வருவது கிடையாது என்றும் அவர் நடத்தை சரியில்லை என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் தான் அவரை அந்த சீரியலில் இருந்து தூக்கினோம்.

வேலை போன விரக்தியில் இப்படி என் மீதும் என் ஷோ மீது அபாண்டமான பழி சுமத்தி வருகிறார். இதற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கும் பதிவு செய்துள்ளேன் என அசித் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading