Local

அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்களை தேடும் அதிகாரிகள்!

அமெரிக்காவுக்குச் சென்ற 9 இலங்கை பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சென்ற இலங்கையர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.

கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர் .

இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தலைமறைவானவர்கள் தேடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading