Local

மக்களுக்கு தகவல்களை வழங்க புதிய நடைமுறை!

வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வாரத்தில் 7 நாட்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading