LocalWorld

வீதி விபத்துகளால் ஆண்டுதோறும் 13 இலட்சம்பேர் பலி! இலங்கையிலும் நிலைமை மோசம்!!

உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 5 முதல் 29 வயது வரை கொண்ட இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி,  விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 இலட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.
2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 இலட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரித்துள்ளது” என்று அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலும் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading