Local

இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தருணம் இது! – கோட்டாபய கூறுகின்றார்

மிகவும் இக்கட்டான நிலையில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வகிபாகத்தை மக்கள் கொண்டுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ள நிலையில், கோட்டாபய தனது உத்தியோகபூர்வ ‘ருவிட்டர்’ தளத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஒரு தேசத்தின் தலைவிதியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். நாட்டின் முக்கியமான சூழ்நிலையில் முற்போக்கான எதிர்காலத்துக்கு மக்களின் உண்மையான சக்தி நிலையானதாக வழங்கப்படவேண்டும். இலங்கை மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புகிறேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading