Local

நாடாளுமன்றம் கலைப்பு: அமெரிக்கா ஆழ்ந்த கவலை! – அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ‘ருவிட்டர்’ பக்கத்தில், இதுதொடர்பான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “இலங்கைநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைகின்றது. இது அரசியல் நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும்.

இலங்கையின் அர்ப்பணிப்புள்ள பங்காளர் என்ற வகையில், உறுதிப்பாட்டையும் செழிப்பையும் உறுதி செய்வதற்கு, ஜனநாயக அமைப்புகளும், செயல்முறைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்புகின்றோம்” – என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading