Local

விபத்தில் தந்தையும் இரு மகன்களும் பலியான பரிதாபம்!

தெகியத்த கண்டி, ஊத்துலபுரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர் எனவும், தாயும் மற்றொரு மகனும் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிப்பர் வாகனமொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தின்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 34 வயதுடைய தந்தை, 14 மற்றும் 10 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த தாயும் மற்றொரு ஆண் பிள்ளையும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading