நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளான அல் ஜசீரா ஊடகவியலாளர்!
கொழும்பில் நேற்று அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் முன்னெடுத்த ஆா்ப்பாட்ட பேரணியை செய்தியாக்கிக் கொண்டிருந்த அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் ஆா்ப்பாட்ட பேரணி மீது பொலிஸாரால் நீா்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டது.
நுகேகொட விஜேராம சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது அல் ஜசீரா ஊடகவியலாளர் மினெல் பெர்னாண்டஸ் நீர்த்தாரைத் தாக்குதலுக்கு உள்ளானார்.