ஏமாற்றிய முன்னணி நடிகர் கைக்குழந்தையுடன் நடிக்க செல்லும் நடிகை!
சின்னத்திரையில் சில மாதங்களுக்கு முன் தன் கணவர் காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கிதால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் புகாரளித்த விசயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னுடன் நடித்த நடிகர் அர்னாவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று ஒரு மகள் இருப்பதை அறிந்தே தன்னை திருமணம் செய்தார் என்றும் என்னை கல்யாணம் செய்து வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அவரால் கர்ப்பமாக இருந்த நிலையில் அர்னாவ் அடித்து உதைத்ததாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் திவ்யா ஸ்ரீதர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கணவர் கைவிட்ட நிலையில் மீண்டும் சீரியல் ஷூட்டிங்கிற்கு புரப்பட்டுள்ளார்.
அதுவும் கைக்குழந்தையுடன் தைரியமாக தனியாக ஷூட்டிங்கிற்கு சென்ற வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் பாராட்டி வருகிறார்கள்.